ஜனாதிபதிக்கு பதவிமோகமா.?

Published By: Robert

16 Jan, 2018 | 09:56 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தனது பதவி மேலுள்ள மோகம் அதி­க­ரித்­து­விட்­டது. தான் தொடர்ந்தும் ஜனா­தி­ப­தி­ யாக இருக்­க­வேண்டும் என்ற ஆசை­யி­லேயே  நீதி­மன்ற ஆலோ­ச­னை­யினை பெறு­கின்றார் என்று மக்கள் விடு­தலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. 

மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணை­யினை வெளிப்­ப­டை­யாக செய்­த­வர்­க­ளுக்கு விசா­ரணை அறிக்­கை­யினை ஏன் வெளியிட முடியாதுள்ளது எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பியுள்ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 

அர­சாங்­கதின் போக்கு நாளுக்கு நாள் மோச­மான வகையில் மாற்­றம்­கண்டு வரு­கின்­றது. இன்று அர­சாங்கம் மக்­க­ளுக்கு என்ன வாக்­கு­று­தி­யினை கொண்­டுப்­பது என்­பது தெரி­யாது திண்­டாடி வரு­கின்­றது.  பிர­தான கட்­சி­களின் பிர­தான கருத்­தாக ஊழலை ஒழிப்போம் என்று கூறப்­பட்டு வரு­கின்­றது. எனினும்  இவர்­களே இத்­தனை கால­மாக ஆட்­சியில் இருந்து ஊழல் செய்­தனர். இன்று தாம் தூய்­மை­யா­னவர் என கூறிக்­கொண்டு ஊழலை ஒழிப்­ப­தாக  கூறு­கின்­றனர் . 

ஊழல் செய்­த­வர்கள் இன்று ஊழலை ஒழிப்­ப­தாக கூறு­கின்­றனர். கொலை, கொள்ளை பாரிய குற்­றங்கள் செய்­த­வர்கள்  இன்று  அதனை தடுப்­ப­தாக கூறு­கின்­றனர். ஆகவே இவர்கள் கூறும் கருத்­துக்கள் அனைத்­துமே பொய்­யான கருத்­துக்­க­ளாகும். வெறு­மனே மேடை­களில் மாத்­திரம் இவர்கள் கருத்­துக்­களை கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர். ஆகவே மக்கள் இனியும் இவர்களை நம்பி செயற்­பட வேண்­டுமா என்­பதை சிந்­தித்­துப்­பார்க்க வேண்டும் . 

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து கள்­வர்­களை பிடிப்­ப­தாக கூறினர். ஆனால் இன்று மூன்று ஆண்­டுகள் கடந்தும் கள்வர் எவ­ரையும் கைது­செய்­ய­வில்லை. தண்­டிக்­கவும் இல்லை. ஆகவே இந்த அர­சாங்கம் கள்­வர்­களை பிடிக்கும் அர­சாங்கம் அல்ல. மாறாக கள்­வர்­களை பாது­காக்கும் அர­சாங்கம். அத்­துடன் இந்த அர­சாங்­கமும் கள்­வர்­க­ளுடன் இணைந்து கள­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

ஆட்­சிக்கு வந்­த­வுடன் மத்­திய வங்­கியில் கை வைத்­து­விட்­டனர். இது குறித்து வெ ளிப்படையாக ஒரு விசா­ர­ணையை ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னெ­டுத்­தது. ஊட­கங்கள் முன்­னி­லையில் ஒவ்­வொரு நாளும் நபர்கள் விசா­ரிக்­கப்­பட்­டனர். விசா­ர­ணை­யினை வெளிப்­ப­டி­யாக செய்­து­விட்டு அறிக்­கை­யினை மூடி மறைத்து வரு­கின்­றனர். ஆகவே குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி தமது அர­சி­யலை தக்­க­வைக்­கவே இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை அரசாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது .

அறிக்­கை­யினை அர­சி­ய­லாக பயன்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­றனர். இதனை அர­சியல் வாய்ப்­பு­க­ளாக பயன்­ப­டுத்த வேண்டாம். இது மக்­களின் பிரச்­சினை ஆகவே குற்­ற­வா­ளி­களை தண்­டி­யுங்கள். ஊழல் வாதி­களே இன்று ஆட்­சியில் இருந்­து­கொண்டு ஊழலை ஒழிப்­ப­தாக கூறுகி­ன்றனர். கள்வரால் களவை ஒழிக்க முடி­யாது. ஆகவே இனியும் இந்த கட்­சி­களை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. 

இவர்கள் தொடர்ந்தும் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் ஏமாற்றி கொள்­ளை­ய­டித்து வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் இன்று கள்­வர்கள் இருதரப்பினரும் திட்­ட­மிட்டு அடித்­துக்­கொள்­கின்­றனர். இவை அனைத்­துமே உண்­மை­களை மறைக்கும் சூழ்ச்சி என்­பதை அனை­வரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் கள்வர்கள் சாயம் பூசப்­ப­டாத ஒரே கட்சி மக்கள் விடு­தலை முன்­னணி மட்­டு­மே­யாகும். கிரா­மங்­களை மீட்­டெ­டுக்க வேண்டும். ஊழல், சர்­வா­தி­கார போக்கில் இருந்து பிர­தேச சபை­களை மீட்டு ஜன­நா­யக ரீதியில் மக்­க­ளுக்கு சேவை செய்யும் பிர­தேச சபை­க­ளாக மாற்­றி­ய­மைக்க வேண்டும். அதற்­கான போராட்­டத்­தையே மக்கள் விடு­தலை முன்­னணி முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

மேலும் இந்த அர­சாங்­கத்தில் யார் தீர்­மானம் எடுப்­பது என்­பது குறித்து யாருக்கும் தெரி­ய­வில்லை. ஜனா­தி­பதி என ஒருவர் ஏன் இருக்­கின்றார் என தெரி­ய­வில்லை. நிதி அமைச்சர் கொண்­டு­வரும் திட்­டத்தை ஜனா­தி­பதி வானொ­லியில் கேட்டே அறிந்து கொள்­கின்றார். அடுத்த நாள் ஏதோ  ஒரு மக்கள் கூட்­டத்தில் அவ்­வா­றான திட்­டங்­களை நீக்­கு­வ­தாக கூறு­கின்­றார். இது மிகவும் வேடிக்­கை­யான அர­சாங்­க­மாகும். அதி­காரம் யார் கையில் உள்­ளது என்­பது யாருக்­குமே தெரி­ய­வில்லை. ஆகவே இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் ஒன்று செயற்­பட முடி­யாது. எனவே முதலில் நாம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் இருந்தே மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும். அதற்­கான நகர்­வு­களில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் மக்கள் கைகோர்த்து செயற்­பட வேண்டும். 

மேலும் , ஜனா­தி­பதி கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்­தையும் பொய்­யாக்கி வரு­கின்றார். தான் ஆட்­சிக்கு வரும் போது என்ன கூறினார். தான் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வ­தாக கூறினார். 19 ஆம்  திருத்­தமும் கொண்­டு­வந்தார் இன்று நீதி­மன்­றத்­திடம் சந்­தேகம் கேட்­கின்றார். அவ­ரது ஆட்சி காலம் குறித்து அவர் கவ­லைப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை. அவ்­வாறு சந்­தேகம் எழுந்­துள்­ளது என்றால் ஆட்­சிக்கு வந்த நேரம் வின­வி­யி­ருக்க வேண்டும், அல்­லது   19 திருத்தம் கொண்­டு­வந்த நேரம் கேட்­டி­ருக்க வேண்டும். அல்­லது நீதி­மன்றம் தானாக ஜனா­தி­பதி  கால எல்லை ஆறு ஆண்­டுகள் என கூறி­னாலும் தான் ஐந்து ஆண்­டு­களே ஆட்சி செய்­வ­தாக கூற வேண்டும். அதுவே கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி. அவ்­வாறு இருக்­கையில் இன்று அவர் நீதி­மன்ற ஆலோ­ச­னை­யினை பெறு­கின்றார்  என்றால் அவ­ருக்கு பதவி மோகம் வந்­து­விட்­டது என்றே அர்த்­த­மாகும்.  ஜனா­தி­பதி தேர்தலில் வாக்குறுதி கொடுத்து விட்டு 19 ஆம் திருத்தம் கொண்டுவரும் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் கேட்கின்றார். அவர்களுக்கு இப்போது அதிகார மோகமும் அச்சமும் வந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தினை உறுதிப்படுத்த அவர்களுக்கு காலம் அவசியமாகின்றது. ஆகவே ஜனாதிபதியின் கதை ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் உள்ளது. இது முழுமையாக ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாக்குறுதிகளைக் கூறி ஊழல் வாத அரசியலையே முன்னெடுத்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44