புதிய கட்சியை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்துவதாக கூறும் தலைவருக்கும் அவரது கூட்டணிக்கும் முதுகெலும்பு இருக்குமாயின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீங்கி தனித்து பயணத்தை ஆரம்பித்துக் காட்டுமாறு கூறுகின்றேன். எனது கட்சியின் கொள்கையினை வைத்துகொண்டு செயற்பட வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இப்போதைய ஊழல் வாதிகளுக்கும், முன்னைய ஊழல் வாதிகளுக்கும் சட்டத்தின் மூலம் உயரிய தண்டனையினை பெற்றுக்கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நகர்வுகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அத்தனகல பகுதியில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்
கள்ளர்கள், ஊழல் வாதிகள் நிறைந்த அரசியல் சூழலிலேயே நாம் எனது பயணத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் இந்த நாட்டை தூய்மையாக முன்னெடுத்து செல்லும் எனது பயணத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி அல்லது எந்தப் பதவியினராக இருந்தாலும் சரி ஊழல் செய்பவர்களையும், முன்னர் செய்தவர்களையும் பாகுபாடு இன்றி தண்டித்து நீதியை நிலைநாட்டுவேன்.
குற்றவாளிகளுக்கான உயரிய தண்டனையினை பெற்றுக்கொடுக்க சட்டத்தின் மூலம் என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் நான் செய்வேன். நான் பதவியை வைத்துகொண்டு விளையாட ஆட்சிக்கு வரவில்லை. நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து சிகெரட் நிறுவனங்களை பகைத்துக்கொண்டுள்ளேன். சில மருத்துவ நிறுவனங்களை பகைத்துக்கொண்டுள்ளேன். அவை அனைத்தும் எமது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் நன்றாக உணர்கின்றேன்.
இப்போது மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்திலும் பல அழுத்தங்கள் உள்ளன. எனினும் நான் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து உண்மைகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை செய்து வருகின்றேன் . நான் ஆணைக்குழு அமைத்தும் விசாரணைகளை முன்னெடுத்தது பொழுதுபோக்குக்காக விளையாட அல்ல. மக்களின் வேதனை என்னவென்பதை என்னால் உணர முடிகின்றது. அதற்கான நியாயம் என் மூலமாக கிடைக்கும். அந்த வாக்குறுதியை நான் மக்களுக்கு கொடுக்கின்றேன்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி அதன் மூலமாக எம்மை வீழ்த்த சிலர் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் மீண்டும் எமது கொள்கையினை அழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எமது பாரம்பரிய உணர்வுகளை அழிக்கும் நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே இவர்களின் கட்சி உறுப்புரிமையினை நீக்கும் செயற்பாடுகளை இவர்களே முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் ஊடக சந்திப்புகளில் தான் புதிய கட்சியை உருவாக்கவில்லை என கூறிக்கொண்டு மக்களிடம் புதிய கட்சிக்கு வாக்களிக்க கூறுகின்றனர்.
இவர்களுக்கு முதுகெலும்பு இருக்குமென்றால் , மேடையில் வீரர்கள் போல கதைப்பது உண்மையெனின் அதன் தலைவர் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சியினை உருவாக்கிக் காட்ட வேண்டும். நாம் தான் இந்த புதிய கட்சியின் உறுப்பினர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டவேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி வெற்றிபெற்றுக் காட்டுங்கள். கட்சியின் கொள்கையும் வேண்டும், கட்சியின் பலகையும் வேண்டும், அடையாளம் வேண்டும் ஆனால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக செயற்படப்போவதில்லை எனவும் கூறுகின்றனர். இவர்களின் செயற்பாடுகள் வெட்கப்பட வேண்டியவையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM