ஜனாதிபதியோ பிரதமரோ எந்தவித ஊழலிலும் ஈடுபடாத தலைவர்கள். அரசாங்கத்தில் ஒருசில ஊழல்வாதிகள் உள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினுள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஊழலையும் விரைவில் அம்பலப்படுத்தி தண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெயன்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ ஊழலில் ஈடுபடுவதில்லை. பெரும்பாலான அமைச்சர்களும் ஊழலில் ஈடுபடுவதில்லை. எனினும் முன்னைய ஆட்சியின் ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட சில நபர்களும் இந்த அரசாங்கத்திலும் உள்ளனர். அவர்களை படிப்படியாக அகற்றும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் . கள்ளர்களை ஒரே தடவையில் தண்டிக்கவும் முடியாது. யாரையும் கொன்றுவிடவும் முடியாது. படிப்படியாக அரசாங்கத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த அரசாங்கம் தூய்மையான அரசாங்கமாக உருப்பெறும். தூய்மையான நாட்டினை உருவாக்குவதிலும் ஊழல் வாதிகளை தண்டிப்பதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார். ஆகவே மக்கள் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கான விடைகள் விரைவில் கிடைக்கும்.
இன்று பொது எதிரணி என கூறிக்கொண்டு தாம் தூய்மையான அணியினர் என தெரிவிக்கும் நபர்கள் தொண்டையில் இரத்தம் கசியும் அளவிற்கு மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் தவறு இடம்பெற்றுள்ளது. அதனை நாங்கள் மறுக்கவில்லை. எனினும் இந்த குற்றத்தில் சந்தேகம் எழுந்தவுடனேயே மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அதேபோல் நீதி அமைச்சரையும் நீக்கிவிட்டோம். மேலும் பலர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த விடயங்கள் மக்களுக்கு தெரியாது. அத்துடன் சுயாதீனமாக விசாரணை நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். அதேபோல் கடந்த ஆட்சிக் காலத்தின் ஊழல்கள் குறித்து மறந்துவிடவும் இல்லை.
கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் மத்திய வங்கியில் இயன்ற அளவு கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் அம்பலப்படுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எயார் லங்கா விமானசேவையை நாசப்படுத்திய நபர்கள் இவர்கள். இவர்களின் உறவினர்களை நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்து மக்களின் சொத்துக்களை முழுமையாக சூறையாடினர். இவ்வாறான நபர்களையே நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தோற்கடித்தோம். இதற்காகவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டோம். இதில் எந்தத் தவறும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM