போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published By: Priyatharshan

15 Jan, 2018 | 02:59 PM
image

பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பமாகியது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள்களே இவ்வாறு அழிக்கப்படுகின்றன.

இந்த அழிக்கும் நடவடிக்கை கட்டுநாயக்கவில் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட 928 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இன்று முற்பகல் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்திச் சபை வளாகத்தில் இடம்பெற்றது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த கப்பல் ஒன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இதன் பெறுமதி 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

பொலிசாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கிறது என்று பொதுமக்களிடம் இருந்துவந்த சந்தேகத்திற்குத் தீர்வாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், கைப்பற்றப்படும் போதைப்பொருள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பகிரங்கமாக அழித்தொழிக்கும் முறைமையொன்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந்த ஆண்டு சுற்றிவளைப்புகளை மேலும் அதிகரித்து போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாந்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவஆரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/29232

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01