ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பொல்பிட்டிய, பல்லேவத்த, கொல்லேன, மொரஹேனகம, அம்மத்தாவ, வக்கம, வக்ஷபான ஆகிய கிராம மக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து இன்று காலை 8 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஐந்து கிராம சேவகர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 14 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான லக்ஷபான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வீதியின் குறைபாடு காரணமாக நாளுக்கு நாள் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
“பொறுப்புவாய்ந்தவர்களே விழித்தெழுங்கள், மாணவர்களின் கல்வியை பாலாக்காதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிக் கொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்காக கினிகத்தேனை பொலிஸாரினால் இடைக்கால தடை நீதி மன்றில் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM