ஓய்வு விடுதியில் தீ ;  சனநெரிசலில் சிக்கி 8 பேர் பலி

Published By: Priyatharshan

14 Jan, 2018 | 04:16 PM
image

போர்த்துக்கலில் இடம்பெற்ற தீ விபத்தையடுத்து அங்கு ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தானது போர்த்துக்கல் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள வில்லா நோவா டா ரெயின்ஹா நகரில் உள்ள இரண்டு மாடி ஓய்வு விடுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வாரவிடுமுறையைக் களிக்க பொதுமக்கள் அங்கு கூடியிருந்த போதே எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மக்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் சனநெரிசல் ஏற்பட்டது. 

இந்த சனநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52