(க.கிஷாந்தன்)
மின்சாரம் மற்றும் புனர்நிர்மான துறை பிரதி அமைச்சர் அஜித் சி பெரேராவுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் 300 இற்கு மேற்பட்டவர்கள் நுவரெலியா நகரில் இன்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டகாரர்கள் நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து பிரதான வீதி வழியாக எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் நகரத்தின் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூர்த்தி செயல்திட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு அதிகாரிகளை தரம் குறைவாக பேசியதற்காக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் ஆர்பாட்டம் அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM