இளைஞன் தற்கொலை : கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

Published By: Priyatharshan

13 Jan, 2018 | 12:05 PM
image

கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உடனடியாக அமுலுக்குவரும் வகையில் மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில், ஹப்புத்தளையைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞன் கஞ்சா போதைப்பொருளை உடன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக புறக்கோட்டை பொலிஸ் நிலைய கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே கொழும்பு புறக்கோட்டை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்குவரும் வகையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33