காதலனின் துரோகம்; காட்டிக் கொடுத்த கடிதம்

Published By: Devika

13 Jan, 2018 | 10:14 AM
image

திஸ்ஸ மஹாராமையில், பதினான்கு வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இளைஞர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் காதலரும் அவரது நண்பர்கள் இருவரும் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் விரக்திக்குள்ளான அச்சிறுமி, தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எதேச்சையாக அதைக் கண்ட சிறுமியின் சகோதரன் பெற்றோரிடம் தெரிவித்ததால் சிறுமி காப்பாற்றப்பட்டார்.

தற்கொலை முயற்சிக்கு முன் சிறுமி எழுதி வைத்திருந்த கடிதம் பெற்றோருக்குக் கிடைத்தது. அதில், தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவர் பற்றிய அடையாளங்களை அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், யால காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்த மூன்று சந்தேக நபர்களையும் பிரதேச வாசிகள் கண்டுபிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதினெட்டு, இருபது மற்றும் இருபத்து மூன்று வயது நிறைந்த இம்மூன்று பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50