மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் எனக் கடிதமெழுதிவிட்டு மாணவன் தற்கொலை

Published By: Priyatharshan

09 Feb, 2016 | 12:36 PM
image

“ எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் ” என கடிதமெழுதிவிட்டு மாணவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவமொன்று பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 14வயது பாடசாலை மாணவன் ஆவார்.

இந்த சம்பவம் இன்று காலை 08.15 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவனின் தாய் சகோதரியை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையிலேயே சிறுவன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெறியவந்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜேசுதாஸ் மில்ரோய் பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் பொகவந்தலாவை சென். மேரீஸ் மத்திய கல்லலூரியில் தரம் 9 இல் கல்வி கற்று வந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் அருகில் இருந்து கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் அதில் “ எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் ” என தற்கொலைசெய்து கொண்ட மாணவன் எழுதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சிறுவன் பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீட்டிற்கு நேற்று இரவு சென்று வந்ததாகவும்  மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46