சிறிய காணிப் பரப்பொன்றை தனது பெயருக்கு மாற்றி எழுதிக்கொள்வதற்காக 96 வயது தாயை வாட்டி வதைத்த பெண்ணை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரில், கட்டுகஸ்தோட்டை, உடுவளவ பகுதியிலுள்ள வீடொன்றை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பொலிஸார் பரிசோதனை செய்தனர்.
அப்போது, வீட்டின் புறத்தேயுள்ள அறை ஒன்றில் 96 வயதுப் பெண் வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
குப்பை, கூளங்களுடன், வாழத் தகுதியற்ற முறையில் இருந்த அந்த அறையில், மேற்படி மூதாட்டி ஒழுங்கான பராமரிப்பு இன்றியும் போதுமான ஆகாரம் வழங்கப்படாமலும் நலிந்துபோன நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், அம்மூதாட்டிக்குச் சொந்தமான சிறு காணித் துண்டொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மகளே அவரை இவ்வாறு நடத்தியிருந்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி, குறித்த அவரது மகள், தனது விருப்பம் நிறைவேறும் வரை தனது உடன்பிறப்புக்களான மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியையும் தன் தாயைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM