குற்றத்தை மறைக்க இன்னொரு குற்றம்!

Published By: Devika

09 Jan, 2018 | 06:22 PM
image

பொலிஸ் அதிகாரியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.

மீகஹாவத்த பகுதியில், சுமார் இரண்டு கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்துக்காக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பொலிஸ் நிலையம் வந்த அப்பெண்ணின் சகோதரர் மீகஹாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்தித்தார்.

அப்போது, தன் சகோதரி மீது உண்மையான குற்றச்சாட்டைப் பதிவு செய்யாமல், இலகுவில் வெளிவரக்கூடிய வகையிலான குற்றத்தைப் பதிவுசெய்யுமாறும் அதற்கு கைமாறாக 2 இலட்ச ரூபா தருவதாகவும் கூறினார்.

அதற்குச் சம்மதிப்பதாகக் கூறிய பொறுப்பதிகாரி நாளை (இன்று 9ஆம் திகதி) பணத்துடன் வருமாறு கூறி அனுப்பினார். பின்னர், இது குறித்து பொலிஸாருக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத் தந்தார்.

அதன்படி, இன்று காலை பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க பணத்துடன் வந்த அந்த நபரை, ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.

அவர் வசமிருந்த பையில் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பணமும் பண அட்டையும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35