கனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய காதலனை பொலிஸார் கைது செய்து கனடாவுக்கு அழைத்த சென்றுள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரை சேர்ந்தவர் ஏஜர் ஹசன் மற்றும் மெலிண்டா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் காதலனை விட்டு மெலிண்டா பிரிந்துள்ளார்.
இதனை தாங்கிகொள்ள முடியாத ஹசன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மெலின்டாவின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு அமெரிக்காவின் டெக்ஸாஸூக்கு தப்பி ஓடிய ஹசனை கனடா பொலிஸார் கடந்த ஜூலை மாதம் கைது செய்துள்ளனர்.
அங்குள்ள நீதிமன்றத்தில் ஹசன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தன்னை கனடாவுக்கு அனுப்பக்கூடாது என நீதிபதியிடம் கோரியுள்ளார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் கனடாவிற்கு ஹசனை கொண்டுசெல்ல நீதிமன்றம் கடந்த வருடம் நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஹசன் கனடாவிற்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM