வவுனியா - மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை 10 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந் நிலையில் வவுனியா நெடுங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவருடன் செல்வம் புஸ்பராணிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றையதினம் மாலை இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு இருவரும் முரண்பட்டுள்ளனர்.
பின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததுடன், குறித்த நபரும் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த குறித்த பெண்ணின் பேத்தி அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அயலவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியற் பொலிஸாருடன் இணைந்து மகாறம்பைக்குளம் காவலரண் பொலிஸார் வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM