அம்பாறை மாவட்டத்தில் திருட்டு மின் சாரம் பெறுவோர் மீது இலங்கை மின் சார சபை சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சமீபகாலமாக அம்பாறை மாவட்டத்தில் திருட்டு மின்சாரம் பெறுவோர் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதன் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவோர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து வருகை தரும் விசேட மின்சார சபை குழுவினர், பிராந்திய மின்சார சபை ஊழியர்கள், பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் சட்டவிரோத மின் பாவனையாளர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கை முழுவதும் திருட்டு மின்சாரம் பெறுவோர்களை கண்டறிய மின்சார சபையின் விசேட அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் 0112422259 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என கேட்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM