“சிங்கல்ட்றீ”க்கு சிங்கிளாக சென்ற யுவதிக்கு நடந்த விபரீதம்!!!

Published By: Digital Desk 7

09 Jan, 2018 | 08:59 PM
image

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட "சிங்கல்ட்றீ " உல்லாச விடுதிக்கு செல்லும் காட்டுப்பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரை இனந்தெரியாத சிலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவ்விடத்திலிருந்து தப்பிசென்றுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று  பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் உக்ரைன் நாட்டை சேர்ந்த 18 வயதான எலிசபெத்பரி  என தெரியவந்துள்ளது. இவர் உல்லாச வீசாவில் இலங்கைக்கு வந்து நுவரெலியாவை பார்வையிட வந்துள்ளார்.

இப்பெண் ஞாயிற்றுகிழமை பகல் வேளையில் நுவரெலியா பதுளை வீதி பகுதியில் அமைந்துள்ள  கல்வி  திணைக்களத்திற்கு மேல் திசை பகுதியில் காணப்படும்  உயரமான பகுதியில் அமைந்துள்ள "சிங்கல்ட்றீ"  உல்லாசவிடுதிக்கு செல்லும் காட்டுப்பகுதியில் தனிமையில் சென்றுள்ளார்.

இதன்போது இந்த யுவதியை பின்தொடர்ந்ததாக சொல்லப்படும் இனந்தெரியாத நபர்களால் இவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பொலிஸ் முறைப்பாட்டை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில்  முறைப்பாட்டை பதிந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணையை செய்துவருவதுடன் பெண்ணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மகபேற்று வைத்திய நிபுணர் ஊடாக வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்படுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56