மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் 20 இலட்சம் ரூபா பெறமதியான 34 கிலோ கஞ்சா தூள் எடுத்துச் சென்ற நபர் ஒருவரை காத்தான் குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் ஆசனத்தின் பின் பகுதியில் மறைத்து வைத்திருந்த 34 கிலோ கஞ்சாவினையும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான் குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM