தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்றுக் காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் பொலிஸார் முன்னெடுத்த 6 சுற்றிவளைப்புக்களில், 5 நடவடிக்கைகளின் போது இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார்.
கட்டான பொலிஸ் பிரிவில் 3 பேரும், பல்லேகலை பொலிஸாரால் மூவரும், கண்டி பொலிஸாரால் ஒருவரும், வரக்காபொல பொலிஸாரால் மூவரும், கொச்சிகடை பொலிஸாரால் ஒருவருமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த 24 மணி நேரத்தில் பொலிசாருக்கு தேர்தல்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
கடந்த 2017 டிசம்பர் 9 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் இதுவரை மொத்தமாக தேர்தல்கள் தொடர்பில் 124 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவாகியுள்ள சுற்றிவளைப்புக்கள் 35, முறைப்பாடுகள் 68 உள்ளிட்ட 103 சம்பவங்கள் தொடர்பில் இந்த 124 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM