மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை மக்களுக்கு வெ ளிப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கை மக்களுக்கு வெ ளிப்படுத்தப்பட்ட பின்னர் நாம் அது தொடர்பில் தீர்மானம் எடுப்போம்.
விசேடமாக இந்த அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு நாம் கோரியிருக்கிறோம். அதன்படி விரைந்து இந்த அறிக்கை வெ ளியிடப்படும் என நம்புகிறோம். அந்த அறிக்கை வெ ளியிடப்பட்டதும் அது தொடர்பில் ஆராய்ந்துவிட்டு அதனை மக்களுக்கு வெ ளிப்படுத்துவோம்.
மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM