உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணய பணிகள் நிறைவடையவுள்ளன. இது குறித்தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கையளிக்கப்பட உள்ளது. இதன்படி ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைப்பாட்டு விசா ரணைகள் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதமளவில் கையளிக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
எனவே, அறிக்கை கிடைக்கப்பெற்றவு டன் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் அமைச்சு மீதான குற்றச்சாட்டை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2012 ஆம் 22ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறைமை திருத்த சட்டமூலத்தில் பல தரப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதன்பிரகாரம் எல்லை நிர்ணய பணிகள் மீளவும் ஆரம்பித்து, இதற்கான விசேட குழுவொன்றும் நிறுவப்பட்டது.
இதன்படி ஜூன் மாதம் நடத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல 70 சதவீதம் தொகுதி முறைமையும், 30 சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM