சரலா அத்துலத்முதலி ஜனாதிபதியுடன்.!

Published By: Robert

07 Jan, 2018 | 10:37 AM
image

முன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி மற்றும் ஸ்ரீமத் அதுலத்முதலி ஆகியோரின் புதல்வியான சரலா அதுலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். 

இதன்போது அவர், சுதந்திர மற்றும் ஜனநாயக சமூகம் ஒன்றை எதிர்பார்த்து தேசத்தை கட்டியெழுப்புவதற்காக விரிவானதோர் பணியை முன்னெடுத்த தனது தந்தையின் அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த சரலா அத்துலத்முதலி இன்று இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு தேசமாக நாட்டை முன்கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டினார். 

மேலும், ஜனாதிபதி நாட்டுக்காக முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க தான் தயார் என தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இலங்கையின் முன்னாள் வர்த்தக, தேசிய பாதுகாப்பு, விவசாயத்துறை  அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலி 1977 – 88 ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பின்னர் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்ததுடன், மக்கள் மத்தியில் மகாபொல புலமைப்பரிசில் முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரபலமானார். 

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறப்பான பணிகளை மேற்கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். 

இதேவேளை, பொதுஜன முன்னணி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த நால்வர் நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். 

இதற்கமைய, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே இவ்வாறு சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32