பூநகரி விபத்தில் ஒருவர் பலி : பொலிஸாருடன் குடும்பத்தார் முறுகல்

Published By: Priyatharshan

06 Jan, 2018 | 09:12 AM
image

பூநகரி  செல்லையாதீவு சந்தியில்  இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒரு பிள்ளையின்  தந்தையான (வயது32 ) சிங்கராசா கேதீஸ்வரன் என்பவர்  உயிரிழந்துள்ள நிலையில் குற்றவாளியை பொலிஸார் காப்பாற்ற முயல்வதாக இறந்தவரின் குடும்பத்தினர் வாய்த்தர்க்கத்திலீடுபட்டனர்.

இச் சம்பவம் நேற்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருசதாவது,

வீதியைக் குறுக்கறுத்த  மாடு ஒன்றுடன்  கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மோதுண்டதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்திற்கு சாட்சியாக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாக தெரிவித்து விசாரணைகள் இடம்பெற்ற நிலையில்  சட்ட வைத்திய  அதிகாரியினதும் மரணவிசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் இறந்த நபர்  தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒரு நபர் மதியத்திற்கு பின்னர் பொலிசாருக்கு  வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக குறித்த விபத்து பார ஊர்த்தியுடன்  மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்தி சாரதியை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில், பார ஊர்த்தியையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் பொலிசார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்த நபர் தெரிவிக்கையில்,  குறித்த விபத்தை தான் பார்க்கும் போது பார ஊர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் பொலிசாருக்கு தெரிவித்திருந்ததாகவும் உடனே தானது வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதனை தெரிவித்து விட்டு சென்றதாக தெரிவித்தார்.

 இவ் விபத்தில் மர்மம் இருப்பதாக்  சந்தேகம் வெளியிட்ட குடும்பத்தார் பொலிசார் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாகவும் தெரிவித்து பொலிசாருடன்  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56