அத்தியாவசியப் பொருள் விலையில் வீழ்ச்சி?

Published By: Devika

05 Jan, 2018 | 09:22 PM
image

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் எனத் தாம் நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதலாவது ‘மெகா சதொச’ நிலையம் இன்று (5) வெலிசறையில் திறந்துவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்படி தெரிவித்தார்.

“சதொச மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. பருவமில்லாத காலங்களிலும் அனைத்து காய்கறி மற்றும் தானிய வகைகளை ஒரே விலையில் விற்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் நடமாடும் சதொச நிலையங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கும் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கும்போது, இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 25 சுப்பர் மெகா சதொச நிலையங்கள் உட்பட 100 சதொச நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 28 சதொச நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02