அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் எனத் தாம் நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலாவது ‘மெகா சதொச’ நிலையம் இன்று (5) வெலிசறையில் திறந்துவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்படி தெரிவித்தார்.
“சதொச மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. பருவமில்லாத காலங்களிலும் அனைத்து காய்கறி மற்றும் தானிய வகைகளை ஒரே விலையில் விற்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் நடமாடும் சதொச நிலையங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கும் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கும்போது, இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 25 சுப்பர் மெகா சதொச நிலையங்கள் உட்பட 100 சதொச நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 28 சதொச நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM