பிபில, வேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து, இறந்துபோன பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. வீட்டில் உறவினர்கள் இருந்தும் அந்தப் பெண் மரணித்தது தெரியாமல் இருந்ததுதான் ஆச்சரியம்!
இறந்துபோன பெண்ணுக்கு 52 வயது. இவர் திருமணம் முடித்திருக்கவில்லை. இவர், தனது இளைய சகோதரி மற்றும் தாயுடன் (76) குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மூவரது உடல் நிலையும் கடந்த சில காலமாகவே அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று (5) அந்த வீட்டில் இருந்து துர்மணம் வெளிவருவதை உணர்ந்த அயலவர்கள் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போதுதான் குறித்த பெண் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்றே உயிரிழந்திருக்கலாம் என்ற நிலையில், அவர் உயிரிழந்தது கூடத் தெரியாமல் அவரது சகோதரியும் தாயும் தமது அன்றாட வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்துள்ளனர்.
அப்பெண்ணின் சடலத்தை பொலிஸார் பிபில வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM