கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இடைகால அறிக்கையை நாமும் ஆதரிப்பதாகிவிடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி அமைப்பளரும் முதன்மை வேட்பாளருமான தங்கவேல் ஜெகதீஸ்வரன், இன்று முற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எதிர்வரும் காலத்தில் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட இருக்கின்றது. இப்பொழுது வந்துள்ள இடைக்கால அறிக்கையின் அங்கீகாரமாக இத் தேர்தல் வெற்றி பார்க்கப்படப் போகின்றது. நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்களோ, அவர்கள் கொண்டுள்ள கொள்கை இடைக்கால சீர்திருத்தத்தின் மீது கொண்டுள்ள கொள்கையாகப் பார்க்கப்பட இருக்கின்றது. நீங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால் அவர்கள் இடைகால நிர்வாக வரைபை ஆதரித்திருக்கின்றார்கள். மக்களும் ஆதரிக்கின்றார்கள் என்ற ஒரு செய்தி வெளியே வரப்போகின்றது.
தேசிய அரசியலைப் பொறுத்தவரையிலே மிகவும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு தேர்தலாக இத் தேர்தல் அமைகிறது. இது வெறுமனே ஒரு உள்ளூராட்சித் தேர்தல் என மட்டும் கருதிவிடாது நீங்கள் கட்சியையும் பார்த்து சிறந்த வேட்பாளரையும் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த தேர்தலில் அவர்கள் மூன்று சபைகளையும் கைப்பற்றி அரசியல் செய்து வருகின்றார்கள். ஆனாலும் இன்று வரை குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்தவித அபிவிருத்தியையும் செய்யவில்லை. அதே போல ஊழல் மலிந்த அதிகார துஸ்பிரயோகம், பெண்களை இழிவு படுத்தக்கூடிய நிர்வாகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இம் முறை தேர்தல் சீர்திருத்தங்கள் சிறப்பாக வந்திருக்கின்றது. எமது நோக்கம் தேசிய அரசியலில், கொள்கைகள் நேர்த்தியாக இருக்கின்றது இவ் உள்ளூராட்சியில் ஊழல் அற்ற அதிகார துஸ்பிரயோகம் அற்ற உள்ளூர் அபிவிருத்திகளுடன் கூடிய ஒரு மக்கள் நேய நிவாகத்தை அமைப்போம் எமது வெற்றி மக்களின் வெற்றி" என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM