பல்கலை மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Published By: Robert

04 Jan, 2018 | 10:03 AM
image

தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொறி­யியல் மற்றும் தொழில்­நுட்­ப­வியல் பீட மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக ஒலுவில் வளா­கத்தில் இயங்­கி­வரும் நிரு­வாக பிரிவு கட்­ட­டத்­தினுள் அத்­து­மீறி நுழைந்து கட­மை­களைச் செய்­ய­வி­டாத குற்­றச்­சாட்டின் பேரில்  59 மாண­வர்­க­ளுக்கு அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்­றினால் நாளை 05ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு நேற்று புதன்­கி­ழமை அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரிவித்­தனர்.

பொறி­யியல் மற்றும் தொழில்­நுட்­ப­வியல் பீடங்­களைச் சேர்ந்த 05 மாண­வர்­க­ளுக்கு வகுப்­புத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை இரத்துச் செய்­யு­மாறு கோரி கடந்த புதன்­கி­ழமை முதல் பல்­க­லைக்­க­ழக நிரு­வாக கட்­ட­டத்­தினுள் தொடர்ச்­சி­யான மறியல் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

போராட்டம் நடத்­தி­வரும் மாண­வர்­களை அங்­கி­ருந்து வெளியே­று­மாறு அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்றம் புதன்­கி­ழமை மாலை 04.00 மணி­ய­ளவில் கட்­டளை பிறப்­பித்­துள்­ளது.

மாண­வர்கள் அத்­து­மீறி நுழைந்து தொடர்ச்­சி­யான மறியல் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­வதால் நிரு­வாக கட­மை­களை செய்­ய­மு­டி­யாது போயுள்­ள­தாக பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

இதே­வேளை பொறி­யியல் பீடம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை முதல் கால வரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ள­து. பல்­க­லைக்­க­ழக வளா­கம் தடை­செய்­யப்­பட்ட வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி பொறி­யியல் பீட மாண­வர்­களை வெளியே­று­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­த­தாக உப­வேந்தர் பேரா­சி­ரியர் எம்.எம்.எம். நாஜீம் மேலும் தெரிவித்தார்.

இதை­ய­டுத்து விடு­தியில் தங்­கி­யி­ருந்த பொறி­யியல் பீட மாண­வர்கள் கணி­ச­மா­ன­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தை விட்டு வெளியே­றி­யுள்­ள­தோடு ஒரு குழு­வினர் தொடர்ந்தும் பல்­க­லைக்­க­ழக நிரு­வாக கட்­ட­டத்­தி­லி­ருந்து மறி­யல் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவர்­களை நிரு­வாக கட்­ட­டத்­தி­லி­ருந்து வெளியே­று­மாறும் நீதி­மன்­றினால் கட்­டளை பிறப்­பித்­துள்­ள­தோடு நிரு­வாக கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காகவும் அரச கடமை செய்யவிடாது இடையூறு விளைவித்தனர்  என பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியதையடுத்து இம் மாணவர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21