ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் பன்மூர் பிரிவில் நேற்று பகல் 7 பேரை காயப்படுத்திய சிறுத்தையினை பிடிப்பதற்கு ஹட்டன் பொலிஸாரும், வனஜீவி அதிகாரிகளும் தொடர் சுற்றி வளைப்பினை மேற்கொள்வதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ கருணாதிலக்க தெரிவித்தார்.
நேற்று தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் ஒருவரை தாக்கியுள்ளது. அப்பெண் கூச்சலிட அவ்விடத்திற்கு வந்த நான்கு ஆண்களையும் தாக்கியதில் அவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுத்தையை சுற்றிவளைப்பதற்கு சென்ற இரண்டு ஆண்களும் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த 7 பேரில் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 6 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"சிறுத்தைகள் இன்று, நேற்று உடனடியாக வந்தவைகள் அல்ல. அவை பல வருடங்களாக இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றது.
அண்மைக்காலமாக தோட்ட குடியிருப்புகளுக்கு அருகாமையில் காடுகள் காணப்படுவதனால் சிறுத்தைகள் தமது வாழ்விடங்களை இப்பிரதேசங்களுக்கு மாற்றியுள்ளதுடன், அவைகளுக்கு உணவாக கால்நடைகள் காணப்படுவதனால் அவைகள் குடியிருப்புகளுக்கு வருகை தருகின்றன.
எனவே குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள காடுகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக சிறுத்தைகள் தமது வாழ்விடங்களுக்கு அடிக்கடி வருகை தருவதாகவும், பல தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாவும், தோட்ட நிர்வாகமும், அரசாங்கமும் இது குறித்து எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை என்றும் இதனால் வாழ்வாதார தொழிலை செய்ய முடியாதுள்ளதாகவும், கால்நடைகளை வளர்க்க முடியாதுள்ளதாகவும், இது குறித்து உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM