புதிய வருடம் பிறந்துள்ள நிலையில் கடந்த வருடத்தில் பொருளாதார நிலைமைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார இயற்கை அனர்த்தம் மற்றும்செயற்கை காரணிகளினால் பாரிய பாதிப்புக்களை சந்தித்தது. கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டுவரும் தாக்கங்கள் இன்னும் குறைவடையாத நிலைமையே காணப்படுகின்றது.
குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டில் இயற்கை அனர்த்தங்கள் அதிகளவில் இடம்பெற்றன. இதனால் பொருளாதாரம் பாரிய தாக்கங்களை எதிர்கொண்டதுடன் பொருளாதார வளர்ச்சியில் நெருக்கடியும் ஏற்பட்டது.
குறிப்பாக 2017 ஆம் ஆண்டின் முழுமையான பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் தற்போது உடனடியாக எதனையும் கூற முடியாது. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் இருந்தது என்பது குறித்து ஆராயலாம். மேலும் கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் விவசாயத் துறை 7.6 வீத பங்களிப்பையும் கைத்தொழில் துறை 27.8 வீத பங்களிப்பையும் சேவைகள் துறை 56.3 வீத பங்களிப்பையும் உற்பத்தி பொருட்கள் துறை 8.3 வீத பங்களிப்பையும் செலுத்தியுள்ளன.
அத்துடன் மூன்றாம் காலாண்டில் இறப் பர் மற்றும் தேயிலை உற்பத்தி அதிக ரித்து காணப்படுகின்றது. சேவைத்துறையானது 4.3 வீதத்தினால் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதை காண முடிகின்றது. அந்தவகையில் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் மதிப்பீடுகளின் பிரகாரமும் முதல் ஒன்பது மாத மதிப்பீடுகளின் 2017 ஆம் ஆண்டு எவ்வாறான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதனை எம்மால் ஊகிக்க முடிகின்றது.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது உத்தேசிக்கப்பட்ட அபிவிருத்தியை விட பின்னடைவான பொருளாதார வளர்ச்சியே 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பதிவாகியுள்ளது. எனினும் அடுத்த ஆண்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது பிரதானமாக கைத்தொழில் மற்றும் சேவைகள் துறை யின் மிதமான விரிவாக்கத்தினால் உந்தப்பட்டுள்ள நிலையில் காலநிலை தொடர்பான குழப்பநிலைகளுக்கு வகைகூறும் வகையில் வேளாண்மை துறையானது எதிர்மறையான வளர்ச்சியொன்றை தொடர்ந் தும் பதிவுசெய்துள்ளது.
குறுகிய வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்ந் தும் மிதமாகக் காணப்படினும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் ஏற்றுமதி மற்றும் முதலீட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தினால் 2018 ஆம் ஆண்டில் தேசிய பொருளாதாரமானது ஒரு ஸ்திரமான முன்னேற்ற நிலையை அடையும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியியல் வசதிகள் நிகழ்ச்சித் திட்டத்தின் நான்காவது தொகுதி இந்த மாதம் கிடைக்கப்பெற்றமையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலீட்டு மீள்பெறுகை தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் போன்றவை சென்மதி நிலுவையினை மேலும் வலுப்படுத்துவதற்கு துணை புரிந்தன என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
அந்தவகையில் மத்திய வங்கி ஆளுநரின் கூற்றின்படி 2017ஆம் ஆண்டில் குறைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருந்தாலும் இவ்வருடத்தில் அதனை மீளமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெ ளியிட்டிருக்கின்றார்.
கடந்த 2016 ஆம் வருடத்தை பொறுத்தவரை நாட்டின் வறுமை நிலையானது 4.1 வீதமாக பதிவாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டை பொறுத்தவரை வறுமை நிலையானது 4.5 வீதமாக காணப்பட்டது.
அதன்படி பார்க்கும்போது நாட்டின் பொதுவான வறுமை நிலையானது படிப்படியாக குறைவடைந்து செல்வதை காண முடிகின்றது.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமை நிலையும் குறைவடைந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை யானது 18.2 வீதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமை நிலையானது 12.7வீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றில் வீழ்ச்சியை காண்கின்றோம். அதேபோன்று வேலையின்மை வீதமானது 4.1 வீதமாக அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் வேலையின்மை வீதமானது தொடர்ந்து இதே நிலையில் இருக்கின்றமையை காண முடிகின்றது.
எது எப்படியிருப்பினும் கடந்த வருடத்தின் பொருளாதார நிலையானது மகிழ்ச்சியடைக்கூடிய வகையில் இல்லையாயினும் மேலும் முன்னேற்றமடையலாம் என்ற நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றின் பொருளாதார ஊடகவியலாளர் சிஹார் ஹனீஷ் கருத்துப் பகிர்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டை பொறுத்தவரை கடினமான வருடமாக அமைந்துள்ளது என்று கூறலாம். குறிப்பாக கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்கள் அதிகம் இடம்பெற்றன. மழை வெள்ளம் மற்றும் வரட்சி ஆகிய இரண்டு வகையான அனர்த்தங்களும் கடந்த வருடத்தில் இலங்கைக்கு ஏற்பட்டன.
இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுடன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. உற்பத்தி பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் அதிகம் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதேபோன்று அரசாங்கத்தின் நிதிக் கொள்கை மற்றும் வரிக் கொள்கை என்பனவும் இறுக்கமடைந்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதாவது வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டதால் மக்களின் கடன் பெறும் அளவு குறைவடைந்தது. அதனாலும் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் தாக்கம் ஏற்பட்டது. அத்துடன் வரிக் கொள்கையும் கடந்த வருடத்தைப் பொறுத்தவரை முழுமையாக மகிழ்ச்சியடைய முடியாது.
ஆனால் எதிர்வரும் வருடங்களில் முழுமையாக பொருளாதார வளர்ச்சியை அடை யும் நோக்கில் சிறந்த அடித்தளம் போடப்பட்டுள்ளது என்பதனை குறிப்பிடலாம் என்றார்.
எது எப்படியிருப்பினும் அரசாங்கம் தொடர்ந்து தொழில்வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களுக்கான பொருளாதார வாய்ப்புக்களை கட்டியெழுப்புவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். கடந்த வருடத்தை பொறுத்த வரை பொருளாதாரதம் சாதாரணமாக பயணித்துள்ளது. எதிர்வரும் வருடங்களில் பொருளாதாரத்தை சிறப்பாக கொண்டு செல்ல நடவடிக் கைகள் எடுக்கப்படவேண்டும். அது குறித்து கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM