இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!!

Published By: Robert

03 Jan, 2018 | 08:56 AM
image

இரண்டு இலட்சம் மக்கள் வாழ்­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் மிகவும் அழ­கான நவீன முறையில்  நகரம் ஒன்றை நிர்­மா­ணித்து சிங்­கப்பூர் போன்ற நாடு­களில் இருக்கும் வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு துறை­முக நக­ரத்­திட்ட வேலைத்­திட்­டங்­களை நேற்று பார்­வை­யி­டச்­சென்ற பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, வேலைத்­திட்­டத்தின் முன்­னேற்றம் தொடர்­பாக அதி­கா­ரி­க­ளிடம் கேட்­ட­றிந்து கொண்­டதன்  பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

சீனா துறை­முக நிறு­வ­னத்­தினால் கடல் நிலத்தை நிரப்பி 99வரு­டங்­களில் இந்த இடத்தில் நகரம் ஒன்றை ஏற்­ப­டுத்­துவோம். இந்த நகரம் பயன்­ப­டும்­வ­கையில் முழு இந்­து சமுத்­தி­ரத்­துக்கும் பொருத்­த­மான நிதி வர்த்­தக மத்­திய நிலையம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். அதற்­காக துறை­முக நக­ர­மா­கிய இந்த பிர­தே­சத்தில் பிரத்­தி­யே­க­மாக நிதி மாவட்டம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். அத்­துடன் இந்த வேலைத்­திட்­டத்தின் கீழ் இந்த பிர­தே­சத்தில் இரண்டு இலட்சம் மக்கள் வாழ்­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் மிகவும் அழ­கான நவீன முறையில்  நகரம் ஒன்றை நிர்­மா­ணிப்போம். சிங்­கப்பூர் போன்ற நாடு­களில் இருக்கும் வச­திகள் அனைத்தும் இந்த நக­ரத்­துக்கு பெற்­றுக்­கொ­டுப்போம். இது சீன துறை­முக நிறு­வ­னத்தின் பிர­தான முத­லீ­டாகும்.

அத்­துடன் இந்த வேலைத்­திட்­டம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு புதி­ய­தொரு சக்­தியை ஏற்­ப­டுத்தும் வேலைத்­திட்­ட­மா­கவே பார்க்­கின்றோம். அத்­துடன் இந்த இடத்தில் இருந்­து­கொண்டே எமது மக்­க­ளுக்கு வெளி­நாட்டு முத­லீ­டுகள் மற்றும் நிதி­வ­ச­தி­களை பெற்­றுக்­கொள்ள தேவை­யான சட்ட மற்றும் வணிக சேவை­களை பெற்­றுக்­கொ­டுப்போம். இதற்கு அப்பால் இந்த பிர­தே­சத்தில் எமது மக்கள் பெரு­மைப்­படும் வகையில் மகிழ்ச்­சி­யாக இருக்க பாரிய பூங்­கா­வொன்றை ஏற்­ப­டுத்த இருக்­கின்றோம்.

அத்­துடன் 2020ஆகும் போது இந்த துறை­முக நக­ரத்தின் அடிப்­படை வேலைத்­திட்­டங்கள் மற்றும் ஏனைய கட்­டட வேலை­களை பூர்த்­தி­செய்ய இருக்­கின்றோம். இதன் மூலம் நாங்கள் நினைத்தும் பார்க்க முடி­யாத நகரம் ஒன்று இங்கு அமை­யப்­போகின்­றது. இது இந்­து சமுத்­தி­ரத்தின் கேந்­திர நிலை­யத்­துக்­கான வேலைத்­திட்­டங்­களில் ஒரு பகு­தி­யாகும். துறை­முகம், விமான நிலையம் ஆகி­ய­வற்றின் சேவை­யுடன் உற்­பத்தி தொழிற்­சா­லை­களை ஏற்­ப­டுத்­து­வது, நிதி சேவை­களை ஏற்­ப­டுத்­து­வது மற்றும் சுற்­றுலா வேலைத்­திட்­டங்­களை ஏற்­ப­டுத்தும் திட்­டத்­திலே அர­சாங்கம் என்­ற­வ­கையில் இந்த வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு செல்­கின்றோம். 

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் இந்த வேலைத்­திட்­டங்­களை நாங்கள் பொறுப்­பேற்­றுள்ளோம். இதற்கு தேவை­யான சட்­டங்­களை இந்த வருடம் முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். அத்­துடன் அனைத்­தையும் ஒரே­த­ட­வையில் செய்­து­மு­டிக்க இய­லாது. தற்­போது நாங்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இலங்கை கடனுக்குள் மூழ்கியிருந்ததற்கு பதிலாக இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி, சிறந்த முறையில் வாழ்வதற்கு முடியுமான, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் பொருளாதாரத்தை ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38