வவுனியாவில் நாளை மத்திய பஸ் நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அநீதி இளைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் பஸ் சேவைகளை மத்திய பஸ் நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடாத்துவதற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை வவுனியா வர்த்தகர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சங்கத் தலைவர் ஆர். கிரிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றிலிருந்து வவுனியா மத்திய பஸ் நிலையம் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையினால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து பஸ் நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை தற்போதும் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM