கற்பாறை விழுவதால் அச்சத்துடன் இரவைக் கழிக்கும் மக்கள்

Published By: Priyatharshan

30 Dec, 2017 | 08:48 AM
image

அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் நேற்று பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. 

குடியிருப்பு பகுதியை நோக்கி சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இக்கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களிலும் பல தடவைகள் இவ்வாறான கற்பாறைகள் விழுந்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இப்பகுதியில் மண்சரிவு ஏற்படுமோ என்ற அச்ச நிலை மக்கள் மனதில் தோன்றியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் நித்திரை இன்றி மக்கள் அவதிப்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கினறனர். 

இப்பகுதியில் 21 குடும்பங்களை சேர்ந்த 150 இற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களிடம் சந்தா பணம் வாங்கும் தொழிற்சங்கங்களும் வேலை வாங்கும் தோட்ட நிர்வாகமும் வாக்கு கேட்கும் அரசியல் வாதிகளும்  இவர்களின் வாழ்க்கை முறை தொடர்பில் பாராமுகமாக இருந்து விடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தங்களை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47