ஐந்து தினங்களாக உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த காட்டு யானை நேற்று அட்டாளைச்சேனை அஷ்ரஃப் நகர் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்த னர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட் அஷ் ரஃப் நகர் பிரதேசத்தில் ஒவ்வாத பொருட்களை உட்கொண்டதால் சுகவீனமுற்று உயிருக்காக போராடிக் கொண்டிருந்த காட்டு யானைக்கு வன விலங்குத் திணைக்கள அதிகாரிகள், மிருக வைத்திய அதிகாரிகள் இணைந்து சிகிச்சையளித்து வந்தனர்.
குறித்த காட்டு யானை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பை மேட்டில் கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உட்கொண்டதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுகவீனமுற்று பாரியளவில் இதற்கு சிகிச்சை வழங்கப்பட்டுவந்தன.
இருந்தபோதிலும் இச் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த காட்டு யானையை மிருக வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.புஷ்பகுமார தலைமையிலான குழுவினர் நேற்று(28) மாலை வேளை பிரேத பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் யானையிலிருந்து பெறப்பட்ட உடலுறுப் பின் பாகங்கள் வைத்திய பரிசோதனை அறிக்கை பெறப்படுவதற்கா கொண்டு செல்லப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM