சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்லவும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் உலகை ஆற்றுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொறுப்பு வாய்ந்தவர்கள் என்ற வகையில் நாட்டின் நலனுக்காக சுற்றாடல் பாதுகாப்புக்காக இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கொங்கிறீட் கட்டட அமைப்புகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். நான் சிறுபருவத்தில் வயல், மருதம் நிறைந்த சூழலிலேயே வாழ்ந்தோம். எனினும் தற்போதைய தலைமுறைகள் சரியாக சுவாசிக்க முடியாத நிலைமை உள்ளது. மக்களின் மனங்களை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது காலத்தின் தேவை யாகும். எனவே நாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன் காடழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவு செய்யப்பட வேண்டும். இருந்தாலும் தற்போது மக்கள் விழிப்புடனே இருக்கின்றனர். எனவே எமது சுற்று சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM