உத்தேசிக்கப்பட்ட அபிவிருத்தியை விட பின்னடைவான பொருளாதார வளர்ச்சியே 2017 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பதிவாகியுள்ளது. எனினும் அடுத்த ஆண்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடை முடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
நெருக்கடியிலிருந்து மீள ஆய்வுகளையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்க முடியும் என்றும் ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியின் 8 ஆவது பணவியல் கொள்கை ஆய்வு ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
நேற்று முன்தினம் 27ஆம் திகதி நடைபெற்ற நிதிச்சபை கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் வட்டி கொள்கை வீதங்களை தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதென தீர்மானித்துள்ளது. எனினும் பொருளாதாரத்தின் அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணிப்பதுடன் தேவை ஏற்படும் பட்சத்தில் பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.
இத்தகைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நாணயச்சபையால் கீழ்வரும் முக்கிய துறை அபிவிருத்திகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளுக்கிணங்க இலங்கையின் பொருளாதாரமானது 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சிக்கு குறைவான வளர்ச்சியொன்றைப் பதிவு செய்துள்ளது. இதனடிப்படையில் பொருளாதாரம் 2017 இல் இரண்டாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 4.0 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2017 இல் மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது பிரதானமாக கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையின் மிதமான விரிவாக்கத்தினால் உந்தப்பட்டுள்ள நிலையில் காலநிலை தொடர்பான குழப்பநிலைகளுக்கு வகைகூறும் வகையில் வேளாண்மை துறையானது எதிர்மறையான வளர்ச்சியொன்றை தொடர்ந்தும் பதிவுசெய்துள்ளது.
குறுகிய வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்ந்தும் மிதமாகக் காணப்படினும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் ஏற்றுமதி மற்றும் முதலீட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தினால் 2018 ஆம் ஆண்டில் தேசிய பொருளாதாரமானது ஒரு ஸ்திரமான முன்னேற்ற நிலையை அடையும்.
அதேபோன்று முதன்மை பணவீக்கமானது 2017 நவம்பரில் எதிர்பார்க்கப்பட்டவாறு வீழ்ச்சிகண்டபோதிலும் உயர்ந்த உள்நாட்டு உணவு விலைகளின் தாக்கத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் ஆகிய இரண்டின் அடிப்படையில் பணவீக்கமும் உயர்ந்த மட்டத்திலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.
மத்திய வங்கியினால் பேணப்பட்டு வருகின்ற இறுக்கமான நாணயக்கொள்கை நிலையின் விளைவினைப் பிரதிபலிக்கும் வகையில் கேள்வி அழுத்தங்களின் மிதமான தன்மையினைக் சுட்டிக்காட்டி மையப் பணவீக்கமானது தொடர்ந்தும் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றது.
நிரம்பல்பக்க குழப்பங்களிலிருந்து தோன்றுகின்ற உயர்ந்த உணவுவிலைகளானது முதன்மைப் பணவீக்கம் உடனடி எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஓரளவிற்கு உயர்ந்த மட்டத்தில் விளங்குவதில் சிறிதளவாவது பாதிப்பினை ஏற்படுத்துகின்ற போதிலும் 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் இறுதியில் விரும்பத்தக்க மட்டத்தினை நோக்கித் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுக்கமான நாணயக் கொள்கை நிலையால் வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சி மெதுவடைந்து 2017 நவம்பரில் விரிந்த பணநிரம்பல் வளர்ச்சி கணிசமானளவு குறைவடைந்தமைக்கு பிரதான காரணமாகும். அதேவேளை வட்டி கொள்கை வீதங்கள் மற்றும் அரச பிணையங்கள் மீதான விளைவுகளுக்கு இடையில் காணப்பட்ட சில வேறுபாடுகள் திருத்தப்பட்டமையால் அரச பிணையங்கள் மீதான விளைவுகள் உயர்ந்த மட்டத்திலிருந்து கீழ்நோக்கிசீராக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுக் கணக்குகளின் அழுத்தங்களை ஓரளவிற்குத் தணிக்கும் வகையில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றின் மீதான உட்பாய்ச்சல்களின் பேரில் நிதியியல் கணக்கிற்கு உறுதியான உட்பாய்ச்சல்கள் அவதானிக்கப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியியல் வசதிகள் நிகழ்ச்சித் திட்டத்தின் நான்காவது தொகுதி இந்த மாதம் கிடைக்கப்பெற்றமையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலீட்டு மீள்பெறுகை தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் போன்றவை சென்மதி நிலுவையினை மேலும் வலுப்படுத்துவதற்கு துணை புரிந்தன.
இத்தகைய அபிவிருத்திகளுடன் மத்திய வங்கியின் தொடர்பான தேறிய அடிப்படையிலான சுமார் 1.7 பில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளையும் பிரதிபலித்து இம்மாத இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் சுமார் 7.8 டொலர் பில்லியன் வரை காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில் நாணயச்சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.75 சதவீதமாகவும் பேணுவதெனத் தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM