யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ , ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் யப்பான் மற்றும் இலங்கை சுமூகமான உறவுகளை பேணி வருகின்றன.
இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக யப்பான் விளங்குகின்றது.
இந்நிலையில், யப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் கடந்த 15 வருடங்களின் பின்னர் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM