ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரெட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம் மஸ்கெலியா நகரில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள், பிரவுண்ஸ்வீக், ஹப்புகஸ்தென்ன, கங்கேவத்த, லக்கம் ஆகிய பாடசாலைகளின் தமிழ் மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இங்கு மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தலும் இடம்பெற்றது.
தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய சந்தியில் ஆரம்பித்து மஸ்கெலியா நகரம் வரையும் சென்றது.
இச் செயற்திட்டத்தின் ஊடாக சிகரெட் மற்றும் மதுபானப் பாவனை உண்டாகுவதற்கான காரணம், உடல், உள பிரச்சினைகள், சமூக சீர்கேடுகள், தடுப்பதற்கான முறைகள், சிகரெட் மதுவற்ற எதிர்கால சமூகம், போன்றவையும் வீதி நாடகத்தின் ஊடாக விழிப்புணர்வுபடுத்தப்பட்டது.
இச் செயற்திட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையம், அபிவிருத்திக்கான வலுவூட்டல், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM