நடிகை நயன்தாராவின் கடவுசீட்டு நகல் மற்றும் அவரிடம் போதைப்பொருள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது போன்ற பொய்யாக தகவல்களை புகைப்படங்களுடனும் சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிட்ட மலேசியா விமான நிலைய ஊழியர் ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த் சங்கர் இயக்கும் 'இருமுகன்' படப்பிடிப்பில் கலந்துகொள்ள மலேசியா சென்ற நயன்தாரா திரும்பி வரும்போது விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் . இதன்போது அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக செய்தி வெளியாகியது.
இதுதொடர்பில் இருமுகன் திரைப்படத்தின் பத்திரிக்கை தொடர்பாளர் யுவராஜ் கருத்து தெரிவிக்கையில் , "படப்பிடிப்பிற்காக மலேசியா சென்ற நயன்தாரா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு தனது உதவியாளர்களுடன் வந்தார்.
மலேசியாவில் 2 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு விமான நிலையத்தில் நயன்தாராவின் கடவுசீட்டுக்கு வேலை செய்ய வந்தவர் என்ற முத்திரை அளித்திருந்தனர். இந்நிலையில் மற்றொரு விமான நிலையத்தில் அந்த முத்திரை அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவரிடம் விமான நிலைய ஊழியர்கள் விசாரணை நடத்தினர். நயன்தாராவிடம் சிறிது நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை இந்தியா திரும்ப அனுமதித்தனர். திட்டமிட்ட படி அவர் கடந்த 3ஆம் திகதி கேரளாவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்குச் சென்று விட்டார். ஆனால், இது போன்ற வதந்திகளை யார் திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மலேசியா பொலிஸ் துறையினரிடம் 'இருமுகன்' படபிடிப்புக் குழு சார்பாக முறைப்பாடு அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார்
இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் கடவுசீட்டு நகல் மற்றும் நயன்தாராவிடம் விசாரணை நடந்தது பற்றிய புகைப்படங்கள் வெளியானமை குறித்து மலேசிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ,
விமான நிலைய ஊழியர் ஒருவர் ‘பேஸ்புக்' மூலம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டமையும் தொடர்ந்து அது 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியமையம் தெரிவயவந்துள்ளது. இதனையடுத்து குறித்த ஊழியர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM