யாழ்ப்பாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலால் இறப்பு சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக செய்திகள் பரவியதையடுத்து அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாக பதிவுகள் இல்லை. அது தொடர்பாக வெளியான செய்திகள் போலியானவை. குறிப்பாக இப் பகுதியில் மர்மக் காய்ச்சலால் இறப்புக்கள் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் எமது வைத்தியசாலையில் இறப்புக்கள் தொடர்பான பதிவுகளில் அவ்வாறான பதிவு ஒன்றும் செய்யப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இன்புளுவன்சா பீ தொற்றால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் அவ்வாறான காய்ச்சல் இப் பகுதியில் ஏற்படவில்லை. எனவே இது தொடர்பாக பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM