தேர்தல்கள் ஆணைக்­குழு எச்சரிக்கை.!

Published By: Robert

27 Dec, 2017 | 11:35 AM
image

உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலின் போது மக்­களின் வாக்­கு­களைப் பெறும் நோக்கில் அர­சி­யல்­வா­திகள் உட்­பட வேட்­பா­ளர்கள் அரச மற்றும் தமது நிதி­யினை பயன்ப­டுத்தி தேர்தல் பிர­சா­ரங்­களின் பொழுது பொருட்­களை பகிர்ந்­த­ளிப்­பது முற்­றாக தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்­குழு தெர­வித்­துள்­ளது. 

சுயா­தீன தேர்தல்கள் ஆணைக்­குழு இது குறித்து வெளியிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதா­வது,

தேர்தல் காலங்­களில் பிர­சா­ரங்­களின் பொழுது அர­சி­யல்­வா­திகள் உட்­பட வேட்­பா­ளர்கள் மக்­களின் வாக்­கு­களை பெறும் நோக்கில் அரச அல்­லது தமது சுய நிதி­யினை பயன்­ப­டுத்தி பொருட்­களை மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெற்றி பெறு­வதை மாத்­திரம் நோக்­காக கொண்டு வேட்­பா­ளர்கள் செயற்­பட வேண்டாம். அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்தி பொருட்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டி­ருப்பின் தேர்­தலின் இறுதி கட்டம் வரை அவைகள் விநி­யோ­கிக்­கப்­பட முடி­யாது.வேட்­பா­ளர்கள் பொருட்­களை குறிப்­பிட்ட காலம்­ வரை களஞ்­சி­யப்­ப­டுத்தி வைக்க வேண் டும்.

தேர்­தலில் பிர­சா­ரங்­களின் பொழுது தேர்தல் சட்­டத்­திற்கு எதி­ராக இடம்­பெறும் நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணிப்­ப­தற்கு விசேட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது .வேட்­பா­ளர்கள் தேர்தல் முடிந்­த­வுடன் அதா­வது பெப்­ர­வரி 15ஆம் திக­திக்கு பின்னர் பொது­மக்­க­ளுக்கு பொருட்­களை விநி­யோ­கிக்க முடியும்.

தேர்தல் சட்­டங்­களை மீறும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வது காவல்­து­றை­யி­ன­ரது பொறுப்பு மாத்­திரம் அல்ல பொது­மக்­களின் பொறுப்­புமாகும். வாக்­கு­களை பெறும் நோக்கில் மக்­க­ளுக்கு இலஞ்சம் அளிப்­பதும் தேர்தல் சட்­டங்­களை மீறிய குற்­ற­மாகும்.

வேட்­பா­ளர்கள் தமது பிறந்­தநாள் மற்றும் குடும்ப நிகழ்­வினை காரணம் காட்டி தேர்தல் காலத்தில் பொருட்­களை பகிர்ந்­த­ளிப்­பதும் மறை­மு­க­மான இலஞ்­ச­மாகும். தேர்­தலின் பொழுதும் பிர­சா­ரங்­களின் போதும் இடம் பெறுகின்ற தேர்தல் சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலும்,மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்ப பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21