சிரிய அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் அந்நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டுப் படைவீரர்கள் சவப்பெட்டிகளில் திரும்ப நேரிடும் என சிரிய வெளிநாட்டு அமைச்சர் வாலித் அல் – முயல்லம் எச்சரித்துள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் சவூதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள் ளார்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படைகளும் கிளர்ச்சிக் குழுக்களும் அனுமதியளித்தால் தான் சிரியாவுக்கு தனது தரைப்படையை அனுப்பத் தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்தமைக்கு இரு நாட்களிலேயே சிரிய வெளிநாட்டு அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
"சிரிய அரசாங்கத்தின் அனுமதியின்றி தரை வழியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தலையீடும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் சவப்பெட்டியிலேயே தமது நாடுகளுக்குத் திரும்ப நேரிடும் என்பதை நான் இங்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM