களனி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனிஷ்க சமரசிங்க, நோபட் பெரேரா மற்றும் பேலியகொட நகரசபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் பெரேரா உள்ளிட்ட நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
பேலியகொட ரோஹன விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஊராப்பொல பிரேமசிறி நாயக்க தேரர் மற்றும் களனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் திலக் வராகொடவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதே நேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மது இஸ்மாயில் முஹம்மது ஷபீ இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM