இலங்கைக் கிரிக்கெட் அணியின் கடைசி நம்பிக்கையாக வந்து சேர்ந்திருக்கிறார் சந்திக்க ஹத்துருசிங்க.
இவரின் பயிற்சியின் கீழ் கற்றுக்குட்டியாக இருந்த பங்களாதேஷ் அணி கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறக்கும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து தனி இடத்தை கிரிக்கெட் உலகில் பிடித்துவிட்டது.
இவை அனைத்திற்கும் காரணமானவர் இலங்கையரான சந்திக்க ஹத்துருசிங்கதான்.
அந்தவகையில் அவர் தற்போது இலங்கை அணியை பொறுப்பேற்றுள்ளார். இலங்கை அணி திறமையான அணிதான். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் சொல்வதற்கில்லை. ஆனால் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பது தற்போது அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் நிஜம்.
இது இப்படியிருக்க இலங்கை அணியை கையிலெ டுத்த சந்திக்க ஹத்துருசிங்க 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியை தயார்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 உலகக் கிண்ண அணியை தயார்படுத்தும் அதேவேளையில் அணித் தலைமையில் மாற்றம் செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
அந்தவகையில் தற்போது ஒருநாள் அணிக்கு தலைவராக செயற்பட்டுவரும் திஸர பெரேராவுக்கு பதிலாக அந்தப் பொறுப்பு டெஸ்ட் அணித் தலைவர் சந்திமாலுக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக் கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM