யானைகளின் அச்சுறுத்தல் : 8 வாக்கெண்ணும் நிலையங்களை மாற்றக் கோரிக்கை.!

Published By: Robert

25 Dec, 2017 | 11:06 AM
image

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் யானை­களின் அச்­சு­றுத்­த­லுள்ள 8 வாக்­கெண்ணும் நிலை­யங்­களை வேறு இடங்­க­ளுக்கு மாற்­று­வ­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அனு­ம­தியை கோரி­யுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணை­யாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

புதன்­கி­ழமை மாலை மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதி­பரும் மாவட்ட தெரிவத்­தாட்சி அலு­வ­ல­ரு­மான எம். உத­ய­குமார் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில் தொட ர்ந்தும்  கருத்து தெரிவித்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணை­யாளர் ஆர்.சசீலன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எதிர் வரும் உள்­ளூராட்சி மன்ற தேர்தலில் 457 வாக்­கெ­டுப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இம்முறை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலில் வாக்­கெ­டுப்பு நிலை­யங்­க­ளி­லேயே வாக்­கெண்ணும் நட­வ­டிக்­கைகளும் இடம்பெற­வுள்­ளன.

வாக்­கெ­டுப்பு நிலை­யங்கள் வாக்­கெண் ணும் நிலை­யங்­க­ளா­கவும் செயற்­ப­ட­வுள் ளன.

தேர்தல் முடிந்­த­வு­ட­னேயே வாக்­கெண் ணும் பணிகள் ஆரம்­ப­மாகி வட்­டா­ரத்தில் தெரிவு செய்­யப்­படும் உறுப்­பினர் அறி­விக்­கப்­ப­டுவார்.

பின்னர் ஒவ்­வொரு வட்­டா­ர­மாக பெற்ற வாக்­குகள் எமது ஒருங்­கி­ணைப்பு நிலை­யத்­திற்கு அறி­விக்­கப்­பட்டு அங்கு வைத்து நாம் விகி­தா­சா­ரத்தை கணக்­கிட்டு விகி­தா­சார உறுப்­பி­னர்­களை சம்­பந்­தப்­பட்ட கட்­சி­க­ளுக்கு அறி­விப்போம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் படு­வான்­கரை பிர­தேசத்­தி­லுள்ள 8 வாக்­கெண்ணும் நிலை­யங்கள் யானை­களின் அச்­சு­றுத்­த­லுள்ள நிலை­யங்கள் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யங்­களில் மாலை 6 மணிக்கு பின்னர் வாக்­கெண்­ணு­வ­தற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம். இதனால் நாம் அந்த வாக்­கெண்ணும் நிலை­யங்­களை வேறிடத்­திற்கு மாற்­று­வ­தற்கு, தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் அனு­ம­தியை கோரி­யுள்ளோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலில் 389,582 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 144 வட்­டா­ரங்கள் உள்ளன. அத்­தோடு கோற­ளை ப்­பற்று வடக்­கிலும், களு­வாஞ்­சி­க்கு­டி­யிலும் இரட்டை வட்­டா­ரங்கள் உள்ளன. இத­னையும் சேர்த்து வட்­டா­ரங்­களில் இருந்து 146 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்யப்­ப­ட­வுள்­ள­துடன் விகி­தா­சா­ரத்தையும் சேர்த்து மொத்தமாக 238 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பும் முக்கியமானதாகும். தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஊடகவியலா ளர்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27