பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தின் மாட்டுக்கு புல் ஆறுக்கும் வயல் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
மேலும், நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற, இந்த சம்பவத்தின் போது, ஏழ்வர் தப்பிச் சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இதன்போது சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கை காரணமாக, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இருந்து, தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்திய பிரதான பாதையும் சேதமடைந்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே, இந்த சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேருக்கும் பொலிஸாரால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 2ம் திகதி மீண்டும் ஹட்டன் நீதாவன் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM