பங்களாதேஷில் புத்தாண்டில் நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 23 வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் முன்னோடி குழாம் பெயரிடப்பட்டடுள்ளது. இந்த மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணியாக ஸிம்பாப்வே இடம்பெறுகின்றது.
புதிய தலைமைப் பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்கவின் ஆலோசனைக்கு அமைய குழாத்தில் இடம்பெறும் 23 வீரர்களுக்கும் விசேட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும் அவர் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றும்வகையில் குறிப்பிட்ட வீரர்களை உள்ளூர் போட்டிகளில் விளையாடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.
அதி சிறந்த ஆற்றல்களை உடைய வீரர்களை இலகுவாக இனங்காண்பதற்கான கால அவகாசத்தை சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு வழங்கும் வகையிலேயே இந்தப் பயிற்சித் திட்டம் அமையவுள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கடந்த இரண்டு வருடங்களாக சரிவை எதிர்கொண்டுவந்துள்ள இலங்கை அணியை மீட்டெடுக்கும் நோக்கில் சந்திக்க ஹத்துருசிங்க இப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்தவுள்ளார். அத்துடன் அணியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அவர் விரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளானதால் இரண்டு வாரங்களுக்கு விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாமலிருந்த குசல் மெண்டிஸுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று சில மாதங்களாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துவரும் குசல் ஜனித் பெரேராவும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் குழாத்தில் ஒரே ஒரு அறிமுக வீரராக 22 வயதுடைய வேகப்பந்துவீச்சாளர் ஷெஹான் மதுஷங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள வீரர்கள் புதிய பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்கவின் கண்காணிப்பில் எதிர்வரும் 28ஆம் திகதி பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
இலங்கை முன்னோடி குழாம் திசர பெரேரா, உப்புல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் ஜனித் பெரேரா, அசேல குணரட்ன, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம, சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், தசுன் ஷானக்க, லஹிர கமகே, விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, ஷெஹான் மதுஷன்க, லஹிரு குமார, அக்கில தனஞ்செய, ஜெவ்றி வெண்டர்சே, அமல அப்போன்சோ, லக்ஷான் சந்தகேன், சத்துரங்க டி சில்வா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM