2022ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.
ஆபிரிக்க கண்டத்தில் முதற்தடவையாக நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை 2022ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு விண்ணப்பித்திருந்தது.
எனினும், பொருளாதார நெருக்கடி, டர்பன் நகரில் உரிய வசதிகள் இல்லாமை மற்றும் போதியளவு அனுசரணையாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் அப்போட்டிகளை நடத்துவதிலிருந்து விலகிக் கொள்வதாக தென்னாபிரிக்கா அறிவித்தது.
போட்டிகளை நடத்துவதற்கான உரிய வேலைத்திட்டங்களை சமர்ப்பிக்க தென்னாபிரிக்காவுக்கு பொதுநலவாய நாடுகளினால் வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா தாமாகவே முன்வந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது.
எனவே, குறித்த போட்டிகளை நடத்துவதற்கு பிரித்தானியாவின் லிவர்பூல் மற்றும் பர்மிங்ஹாம் ஆகிய நகரங்கள் விண்ணப்பித்திருந்தன.
இரு நகரங்களும் ஒரே நாட்டைச் சார்ந்ததால் இறுதியில் பர்மிங்ஹாமில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு எந்த நகரமும் விருப்பம் கோராததால் பர்மிங்ஹாமின் வெற்றி உறுதியானது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM