மனிதன் இயற்கையை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டாலும் இயற்கை அவ்வப்போது மனித செயற்பாட்டை திக்குமுக்காடச் செய்யும் வகையில் தனது மேதா வித் தன்மையை வெளிக்காட்ட பின் நிற்ப தில்லை. அதற்கிணங்க பல தொற்று நோய் கள் தாக்கம் செலுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காவுகொள்கின்றன.
அதன் பின்னணியாகவே தற்போது ஸிகா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதிகளவான உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தாவிடினும், பரம்பரை இடைவெளியை ஏற்படுத்தும் தன்மையினை ஸிகா வைரஸ் கொண்டுள்ளது. குறித்த வைரஸ் சர்வதேச ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதனாலேயே உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
ஸிகா வைரஸின் தோற்றம் ஸிகா வைரஸானது ஆரம்பத்தில் குரங்குகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உகண்டாவிலுள்ள வெப்ப வலய காடொன்றின் பெயரே ஸிகாவாகும். 1947ஆம் ஆண்டு ஸிகா காட்டிலுள்ள குரங்கொன்றிலேயே குறித்த வைரஸ் இனங்காணப்பட்டது. ஆகவே, ஸிகா காட்டிலு ள்ள குரங்கில் இனங்காணப்பட்டதால் அந்த வைரஸுக்கு ஸிகா என்று பெயர் சூட்டப்பட்டது.
எனினும், அந்த வைரஸ் 1954ஆம் ஆண் டில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரொருவரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு மைக்ரோனேஷியாவிலும் 2013ஆம் ஆண்டு பொலினேயாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் குறித்த வைரஸின் தீவிரத் தன்மை உணரப்படவில்லை. இருந்தபோதிலும், 2015ஆம் ஆண்டில் பிரேசிலில் ஸிகா பரவியபோதே உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் விதமாக தீவிரத் தன்மை உணரப்பட்டுள்ளது.
தீவிரத் தன்மை டெங்கு நோயைப்போன்று ஸிகா வைரஸ் தொடர்பில் பீதி கொள்ளத் தேவையில்லை. அது டெங்கைப் போன்று பாரதூரமான தன்மை கொண்டதுமல்ல. உயிராபத்தை ஏற்படுத் தும் உயிர்கொல்லியாக இல்லாதபோதும் ஊனமுற்ற பரம்பரையொன்றினை உருவாக் கும் வல்லமை கொண்டது. குறித்த வைர ஸின் தாக்கத்தினால் பிறக்கவிருக்கும் குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அதாவது கருவுற்றிருக்கும் தாயொருவரை ஸிகா வைரஸ் தாக்கும் போது தாய்க்கு பாரியளவிலான விபரீதங்கள் ஏற்படுவதில்லை. எனினும், கருவில் உள்ள சிசுக்களை அது வெகுவாக பாதிக்கிறது.
அதனால் பிறக்கும் குழந்தைகள் உருவ அமைப்பில் சிறிய தலைகளுடனும் மூளை வளர்ச்சி குன்றிய நிலையிலுமே பிறக்கின்றன. கருவிலிருக்கும் குழந்தைகளைப் பாதிப் பது தெரிய வந்த பின்னரே ஸிகாவின் பாத கத் தன்மை பற்றி உலகளாவிய ரீதியில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரேஸில் நாட்டில் கடந்த வருடத்தில் ஸிகா வைரஸ் தாக்கத்திற்குள்ளான தாய்மார்களுக்கு பிறந்த 3,893 குழந்தைகளின் தலை சிறிதாகவும் மூளைவளர்ச்சி குன்றிய நிலையிலும் பிறந்துள்ளன. அதேபோல் லத்தீன் அமெரிக்காவில் சுமார் 15,000 குழந்தைகள் குறித்த நோய் தாக்கத்துடன் பிறந்துள்ளன.
பாரியளவான உயிராபத்தை ஏற்படுத்தாத குறித்த நோய்த்தாக்கத்தின் அச்சுறுத்தல் தொடர்பில் அதிகளவில் பீதி கொள்வதற்கு, குழந்தைகளின் விவகாரமே பிரதான இடம் வகிக்கின்றது.
தொற்றுக்கான அறிகுறி டெங்கு, சிகன்குன்யா, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை காவிச் செல் லும் ஈடிஸ் ஈஜிப்ட் நுளம்புகளே ஸிகா வைரஸையும் காவுகின்றன.
எனவே டெங்கு நோயின் அறிகுறிகளையே ஸிகா தொற்றுள்ளவர்களிலும் அவதானிக்க முடியும். மிதமான காய்ச்சல், உடம்பில் ஒருவித அரிப்பு ஏற்படல், மூட்டு வலி, தலைவலி, கண் வெண்படலம் சிவப்பு நிறமாதல் என்பன ஸிகா தொற்றியமைக்கான அறிகுறிகளா கும். எனினும், ஸிகா தொற்றியுள்ள அனைவருக் கும் நோய் ஏற்படும் எனவும் கூற முடியாது.
பாலியல் உறவு மூலம் பரவுமா?
ஸிகா வைரஸ் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்ட தொற்று நோய் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாலியல் உறவின் மூலம் ஸிகா பரவியதற்கான உறுதியான சான்றுகள் இல்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், பாலியல் தொடர்பின் மூலம் ஸிகா வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.
டலஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஸிகா தொற்றுள்ள தன்னுடைய வாழ்க்கைத்துணையுடன் பாலியல் உறவு கொண்டதனால் அவருக்கு ஸிகா தொற்றியுள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் பாலியல் மூலம் ஸிகா தொற்று ஏற்பட்டுள்ள குறித்த நபரின் வாழ்க்கைத் துணை ஸிகா வைரஸ் தொற்றியுள்ள பிராந்தியங்களுக்கு பயணம் செய்ததனால் அவருக்கு தொற்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், பாலியல் உறவின் மூலம் தொற்றுக்குள்ளான நபர் ஸிகா தொற்றுள்ள பிராந்தியங்களுக்கு பயணிக்கவில்லை. எனவே அவருக்கு பாலியல் உறவு மூலம் ஸிகா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் தொற்றுள்ளவரின் விந்தணுவில் ஸிகா வைரஸ் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே தொற்றுள்ள ஒருவர் ஏனையோருடன் பாலியல் ரீதியிலான உறவை வைத்திருக்கும்போது மற்றவருக்கும் அது பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தொற்று நோய் தடுப்பு நிவாரண சிகிச்சை பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூஷான் 'வைரஸ் தொற்றுள்ள நபரொருவரின் விந்தணுவை பரிசோதனைக்குட்படுத்தியபோது அதில் ஸிகா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரத்தத்தாலும் பரவக்கூடிய வாய் ப்பு உள்ளது. ஆயினும், அது குறைந்தளவிலேயே சாத்தியமாகலாம். எனினும் ஸிகா வைரஸ் தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தாய் நாடு திரும்புபவர்கள் இரத்த தானம் செய்ய முற்படுவார்களாயின் அவர்கள் குறைந்தது 28 நாட்களின் பின்னரே அதனைச் செய்ய முடியும் என அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களிலிருந்து கருவி லூல்ல சிசுக்களை பாதிக்கின்ற போதிலும் தாய்ப்பாலினூடாக குழந்தைகளுக்கு ஸிகா வைரஸ் பரவியதாக இதுவரையில் பதிவாகவில்லை.
நிவாரணம் ஸிகா வைரஸ் தொற்றியுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான தடுப்பு மருந்து இதுவரையில் பாவனையில் இல்லை. வரும் முன் காப்பதே தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான பிரதான வழிவ கையாகும்.
இருந்தபோதிலும் இந்திய நிறுவனம் ஒன்று ஸிகா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறித்த மருந்தின் பரீட்சார்த்த நடவடிக் கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. எனவே விரைவில் அந்த தடுப்பு மருந்து பாவனைக்கு வரும் எனவும் அந்நிறு வனத் தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிராபத்தை ஏற்படுத்தும் தன்மைக ளைக் கொண்டிராத ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நோய் வாய்ப்பட்டால், அது ஒரு வார காலம் காலம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதிகமாக நீர் அருந்துதல், ஓய்வெடுத்தல் மூலம் நோயின் தீவிரத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். எனினும், வைரஸைக் காவிச் செல்லும் நுளம்புகள் பரவாமல் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதே சிறந்த வழியாகும். மேலும் நுளம்புத் தாக்கத்திலிருந்து தப் பிக்க அவதானமாக நடந்துகொள்ள வேண் டும். அத்துடன், ஸிகா வைரஸைப் பரப்பும் நுளம்புகள் பகல் பொழுதுகளில் தீவிர செய ற்றிறன் கொண்டவை. எனவே, பகல் வேளைகளில் உடம்பை மறைக்கும் வகையில் ஆடை அணிவதனூடாக நுளம்புக்கடியிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். இலங்கையில் ஸிகா பரவும் அபாயம் உள்ளதா?
ஸிகா வைரஸ் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியிலிருந்து வெகுவாக பரவி வருகிறது. பொலிவியா, ஈக்குவடோர், கயானா, பிரசில், கொம்பியா, எல்சல்வடோர், கௌத மாலா, மெக்சிக்கோ, பனாமா, பராகுவே, வெனிசுவெலா, ஹொன்டுராஸ், சூரினாம், பாபடோஸ், ஹெய்டி, பிரெஞ் கைனா, குவா துலூப்பே, மார்டினிக், செய்ன்ட் மார்டின், புயடோரிகா போன்ற நாடுகளில் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதாக இதுவரையில் இனங்கா ணப் படவில்லை. உலக நாடுகளில் பாரியளவான பயமுறு த்தலை ஏற்படுத்தியுள்ளதால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஆகவே, இலங்கையில் ஸிகா பரவுவதனைத் தடுப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஸிகா இனங்காணப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பிரயா ணிகளை விமான நிலையத்தில் விசேட பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, இது தொடர்பில் வீணாக பீதி கொள்ளத் தேவையில்லையெனவும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இருந்தபோதிலும் ஸிகா வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக வும் அது தொடர்பில் அவதானமான நடந்து கொள்ளுமாறும் அரச சிரேஷ்ட உயிரியல் விஞ்ஞான உதவி அதிகாரி தெரிவித்துள் ளார். டெங்கு நோயை ஏற்படுத்தும் ஈடிஸ் ஈஜிப்ட் நுளம்புகளே ஸிகா வைரஸையும் காவிச் செல்கின்றன. எனவே ஈடிஸ் ஈஜிப்ட் நுளம்பு இனம் இலங்கையில் ஏற்கனவே உள்ளதால் ஸிகா வைரஸ் பரப்வுவதற்கான அபாயம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸிகா ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் ஸிகா வைரஸ் விரைவாகப் பரவி வருவ தனால் சர்வதேச சுகாதார ஸ்தாபனம் சர்வதேச பொது சுகாதார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச உலக சுகாதார ஒழுங்குபடுத்தல் அவசரகால சபையின் கூட்டத்தின்போதே இப்பிரகடனம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கண்டறிதல் மற்றும் தடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஸிகா வைரஸ் விரைவாகப் பரவி வருவதனால் சில நாடுகள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டியுள்ளன. அதற்கிணங்க எல்சல்வ டோர் நாட்டு அரசாங்கம் அங்குள்ள பெண்களை இரு வருட காலத்திற்கு கர்ப்பம் தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அந்நாட் டில் செயற்படும் பெண்களின் உரிமைக ளைப் பாதுகாக்கும் அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. அதுமாத்திரமன்றி, பிரேஸில் ஸிகா வைரஸ் தொற்றுள்ள பெண்கள் தமக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதி வழங் குமாறு கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, பிரேஸில் ரியோ டி ஜெனிரோ நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம் பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. எனவே, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் ஸிகா வைரஸ் தாக்கம் செலுத்தும் அபாயம் உள்ள தாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் ஒலிம்பிப் போட்டிகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவ டையலாம் எனவும் அஞ்சப்படுகிறது. எனி னும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவ தற்காக வருகை தரும் வீரர்கள் மற்றும் பார் வையாளர்களுக்கு ஸிகாவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஆலோசனை வழங்கவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சபையின் தலைவர் தோமஸ் பச் தெரிவித் துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM