வடகொரியாவின் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உயர் அதிகாரிகள் பல கோரமான கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகள் வடகொரிய முகாமில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் சில செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
"ஒரு முறை முகாம்களில் இருந்து இருவர் தப்பிச்சென்றனர். இதனால் அவர்களது குடும்பத்தில் இருந்து 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதோடு இல்லாமல் குறித்த இருவரையும் தேடி கண்டுபிடித்து அனைவரின் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டது.
பெண்களும் மிக மோசமான முறையில் நடத்தப்படுவர். பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழிப்பர். கற்பழிக்கப்பட்ட பெண்கள் கற்பமானால் அதை கலைத்துவிட வேண்டும். அதையும் மீறி குழந்தை பிறந்தால் குழந்தையை உயிரோடு எரித்துவிடுவர்.
அங்கு பணியுரியும் உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு நடத்த வேண்டும். முகாமில் 16 மணி நேரம் உழைக்க வேண்டும். சோளமும் உப்பும் மட்டுமே உணவாக வழங்கப்படும்.
கண்மூடித்தனமான தாக்குதல், இருட்டு அறை தண்டனை ஆகிய அனைத்தும் மக்களுக்கு வழங்கப்படும். முகாம்கலில் நடக்கும் கொடுமைகள் கிம் ஆட்சிக்கு வந்ததும் அதிகமானது." எனவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM