இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் இலங்கை அணி நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கட்டக் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிராக 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியானது இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
இதேபோல இலங்கை அணி சந்தித்த மோசமான தோல்வியும் இதுதான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பல்லேகலைமைதானத்தில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமான நிலையாக இருந்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்ப பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பை தேர்வுசெய்தது.
அதன்படி, ரோஹித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5ஆ-வது ஓவரில் மெத்தியூஸ் பந்தில் ரோஹித் ஷர்மா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.
இந்நிலையில் 24 ஓட்டங்களுடன் ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப அடுத்ததாக டோனி களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஓட்ட வேகம் உயர்ந்தது.
15ஆ-வது ஓவரில் 61 ஓட்டங்கள் எடுத்த ராகுல், திஸரவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதிக் கட்டத்தில் துடுப்பெடுத்தாட வந்த மணிஷ் பாண்டே 2 சிக்ஸர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்களை எட்டியது. டோனி 39 ஓட்டங்களையும், பாண்டே 32 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஆகி யோர் களமிறங்கினர். திக்வெல்ல 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந் தார். அடுத்ததாக குசல் ஜனித் பெரேரா களமிறங்கினார். மறுமுனையில் நின்ற தரங்க 23 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் ஆட்டமிழக்க, குசல் ஜனித்தும் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அவர்களை தொடர்ந்து வந்தவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்திய அணி பந்து வீச்சில் சஹால் 4 விக்கெட்டுக்களை யும், பாண்டியா 3 விக்கெட் டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், உனத் கட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM