இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கின்றது. இதன் முதலாவது போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதியன்று புனேயில் ஆரம்பமாகவுள்ளது.
ஏனைய இரண்டு போட்டிகளும் 12 ஆம் திகதியன்று ராஞ்சியிலும், 14ஆம் திகதியன்று விசாகபட்டிணத்திலும் இரவு 7.30 மணிக்கு மின்னொளியில் நடைபெறும்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மலிங்க காணப்படுகின்ற போதிலும், காயம் காரணமாக அவர் பங்கேற்காததால் தினேஷ் சந்திமாலுக்கு இலங்கை அணியின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணித்தலைவரான எஞ்சலோ மெத்தியூஸும் இத் தொடரில் பங்கேற்கவில்லை. அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆற்றல்களை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான தில்ஹார பெர்னாண்டோ, மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர். இலங்கை கிரிக்கெட் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதியன்று பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலேயே இறுதியாக விளையாடினார்.
மேலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் பிரகாசித்து வரும் சீக்குககே பிரசன்னவும் இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாமில் இணைக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இவர்களைத் தவிர அசேல குணரட்ண, தசுன் சானக்க, கசுன் ரஜித மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில் கசுன் ரஜித்த, அசேல குணரட்ண ஆகியோர் முதல் முறையாக இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டவர்களாவர்.
இத் தொடரில் பங்குபற்றும் இலங்கை குழாத்திற்கு லஹிரு திரிமான்ன, அஜந்த மெண்டிஸ், நுவன் குலசேகர , ஷெஹான் ஜயசூரிய, கித்ருவன் வித்தானகே, சுரங்க லக்மால், இசுறு உதான ஆகியோர் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
இந்தியாவின் முன்னணி வீரரான விராட் கோஹ்லிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த மனிஷ் பாண்டே மற்றும் சகல துறை வீரரான ஹார்திக் பாண்டியா போன்ற இளம் வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் குழாமில் இடம் கிடைத்துள் ளது. அத்துடன் சிரேஷ்ட வீரர்களான ஹர்பஜன் சிங், ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ் சிங் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப் பட் டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறந்த
ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ள பவான் நேகிக்கும் இடம் கிடைத்துள் ளது.
இதுவரை இரு அணிகளும் 6 தடவை கள் ஒன்றையொன்றை எதிர்த்தாடி தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா முதலாவது இடத்திலும் இலங்கை 3ஆவது இடத்திலும் உள்ளது.
இரு அணிகளிலும் இளம் வீரர்கள் உள்ளிட்ட சகலதுறை வீரர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
அத்துடன் இரு அணிகளிலும் அனுபவ வீரர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொடரானது, எதிர்வரும் ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது
தொடருக்கு முன்னோடியாக அமையும். ஆகவே, தத்தமது அணிகளை பிரதிநிதித் துவப்படுத்துவதற்கு இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
இலங்கை கிரிக்கெட் அணி விபரம்
தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திலகரட்ண டில்ஷான், தனுஷ்க குணதிலக்க, தசுன் சானக்க, சாமர கப்புகெதர, அசேல குணரட்ன, மிலிந்த சிறிவர்தன, சீக்குகே பிரசன்ன, திசர பெரேரா, சச்சித்ர சேனாநாயக்க, தில்ஹார பெர்னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, கசுன் ரஜித
இந்திய கிரிக்கெட் அணி விபரம்
மஹேந்திர சிங் டோனி (அணித் தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரிட் பூம்ராஹ், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், மொஹமட் சமி, பவான் நேகி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM